×

வானிலை முன்னறிவிப்புக்கு உதவும் ரேடார் கருவிகளை உடனே சரிசெய்க: ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் கோரிக்கை

சென்னை: வானிலை முன்னறிவிப்புக்கு உதவும் ரேடார் கருவிகளை உடனே சரிசெய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வானிலை முன்னறிவிப்புக்கு உதவும் ரேடார் கருவிகளை உடனே சரிசெய்ய வேண்டும். வானிலை ரேடார்களை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய 2020 டிச.2, கடந்த நவ.12-ல் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன். 2 கடிதங்கள் எழுதியும் பிரதமர் அலுவலகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரேடாரை சரி செய்யாததால் சென்னையில் நேற்று பெய்த கனமழை குறித்த முன்னறிவிப்பை வானிலை மையத்தால் தர முடியவில்லை. மழை குறித்த கேள்விக்கு, இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு இவ்வளவு தரவுகள் தான் தர முடியும் என புவியரசன் விளக்கம் அளித்தார். நேற்று சென்னை பெருமழையால் பொதுமக்கள் நெரிசலில் சிக்கி தவித்ததற்கு ஒன்றிய அரசின் தாமதமே காரணம். மழை வெள்ள நிவாரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு நிதி தரவில்லை. மக்களின் துயரை போக்கிட வானிலை ரேடார்களை ஒன்றிய அரசு உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கோரிய மழை, வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்றும் தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்தார். …

The post வானிலை முன்னறிவிப்புக்கு உதவும் ரேடார் கருவிகளை உடனே சரிசெய்க: ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dayaniti Varanadhan ,Union Government ,Chennai ,GP ,Dayaniti ,Dayanidi Maradan ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...